Thursday, October 14, 2010

சமூகச் சீர் கேடு கருத்தரங்கு

     13.11.10 ஆம் நாள் சனிக்கிழமை   காலை  மணி 8 முதல்  மாலை வரையில் மலாயாப் பல் கலைக் கழகத்தில்  சமூகச் சீர்கேடு மீதான கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கக் கூடிய   சமூக, சமய , அரசியல்  கட்சிகளின்  ஆதரவோடு  இக் கருத்தரங்கு நடத்தப் படவுள்ளது .

    மலேசிய இந்தியர்களிடையே நிலவி வரும் சமூக சீர் கேடுகள் பற்றி  ஆய்வு ஒன்றைச் செய்வதும் அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை விளங்கிக் கொள்வதும்  அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடுவதும் இக் கருத்தரங்கின் நோக்கமாகும்.  சமூக சீர்கேட்டினை குறைப்பதற்கான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனவே அனைத்து இயக்கப் பிரதிநிதிகளும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    ம.இ.கா, இளைஞர் பிரிவு தலைவர் திரு.த.மோகன்  , மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் திரு.ஆர்.எஸ். மோகன்ஷான், மலேசிய இந்து தர்ம மாமன்றத் தலைவர் முனைவர்என்.எஸ். ராஜேந்திரன்  , மலேசிய இந்திய கலை கலாச்சார சங்கத் தலைவர் திரு.ப.ஆனந்தன்  , மலாயாப் பல்கலை கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் எஸ். குமரன் , மலேசியத் தமிழ் இலக்கிய கழகத்தின் திரு. மா.கருப்பண்ணன், மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் இளைஞர் பிரிவு தலைவர் திரு. பி.பன்னீர் செலவம் , மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் பொருளாளர் டத்தோ செல்லக் கிருஷ்ணன் ,இந்தியத்  திரைப்பட தணிக்கை வாரிய பிரதிநிதிகள், கிள்ளான் கிறிஸ்துவ இயக்கம் , உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் கிருஷ்ணன் மணியம் , இந்திய ஆய்வியல் துறை வே.சபாபதி   உட்பட இருபத்தைந்து பேர் கலந்து கொண்ட கலந்துரையாடலில்   கருத்தரங்கு நடத்த ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.

     தமிழ்த் திரைப் படங்கள், சின்னத்திரை நாடகங்கள் பற்றியும் பேசப் பட்டன . பிறப்புப் பத்திரம் அ.கா. இல்லாமையின் காரணமாக வேலை கிடைக்காமல் அவதிப்படுவது, பள்ளிகளில் மாணவர்களை இன துவேசத்திற்கு உட்படுத்துவது, பெற்றோர்களின் கண் காணிப்புக் குறைவின் காரணமாக  மாணவர்கள் தடம் புரண்டு போவது, முதலாம் படிவத்திற்கு முந்தைய புகு முக வகுப்பு நமக்கு வேண்டாம் என்பது பற்றியும் கருத்துக் கூறப்பட்டது.

     நாட்டில் உள்ள எல்லா இயக்கத்தலைவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டு மென்று கருத்து தெரிவிக்கப் பட்டது. எனவே  சமூகத்திலுள்ள எல்லா தலைவர்களும் தனிப்பட்டவர்களும் கலந்துக்கொள்ளும்படி அழைக்கின்றோம் . உணவு , கோப்பு ஆகிய வை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வதற்கு வசதியாக  பேராளர்கள் தங்களது  பெயர்கலைரை 31.10.10க்குள் பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புமுகவரி :     மா.கருப்பண்ணன் , செயலாளர்  ,கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழு
                         36 Jalan 25/43
                         Taman Sri Muda
                         40400 Shah AlaM
Email         :     vaiskaru @yahoo.com
Fax             :     0351221569
தொ.பேசி         : சு.வை.லிங்கம்   019 6011569  முனைவர் எஸ். குமரன் 012 3123753
                      மா.கருப்பண்ணன் 017 6767180
                              

No comments:

Post a Comment