Tuesday, November 16, 2010

சமூகச் சீர் கேடு கருத்தரங்கு 5.12.10க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

     13.11.10ல் நடைப் பெறவிருந்த சமூக சீர்கேடு பற்றிய ஆய்வு கருத்தரங்கு தவிர்க்க முடியாத காரணங்களினல்  5.12.10 நாள் ஞாயிற்றுக்கிழமைக்கு  நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   காலை  மணி 8 முதல்  மாலை வரையில் மலாயாப் பல் கலைக் கழகத்தில்  கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கக் கூடிய   சமூக, சமய , அரசியல்  கட்சிகளின்  ஆதரவோடு  இக் கருத்தரங்கு நடத்தப் படவுள்ளது .

    மலேசிய இந்தியர்களிடையே நிலவி வரும் சமூக சீர் கேடுகள் பற்றி  ஆய்வு ஒன்றைச் செய்வதும் அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை விளங்கிக் கொள்வதும்  அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடுவதும் இக் கருத்தரங்கின் நோக்கமாகும்.  சமூக சீர்கேட்டினை குறைப்பதற்கான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனவே அனைத்து இயக்கப் பிரதிநிதிகளும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

   
     தமிழ்த் திரைப் படங்கள், சின்னத்திரை நாடகங்கள் பற்றியும் பேசப் பட்டன . பிறப்புப் பத்திரம் அ.கா. இல்லாமையின் காரணமாக வேலை கிடைக்காமல் அவதிப்படுவது, பள்ளிகளில் மாணவர்களை இன துவேசத்திற்கு உட்படுத்துவது, பெற்றோர்களின் கண் காணிப்புக் குறைவின் காரணமாக  மாணவர்கள் தடம் புரண்டு போவது, முதலாம் படிவத்திற்கு முந்தைய புகு முக வகுப்பு நமக்கு வேண்டாம் என்பது பற்றியும் கருத்துக் கூறப்பட்டது.

     நாட்டில் உள்ள எல்லா இயக்கத்தலைவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும். எனவே  சமூகத்திலுள்ள எல்லா தலைவர்களும் தனிப்பட்டவர்களும் கலந்துக்கொள்ளும்படி அழைக்கின்றோம் . உணவு , கோப்பு ஆகிய வை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வதற்கு வசதியாக  பேராளர்கள் தங்களது  பெயர்களை  பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அகப்பக்கமுகவரி:     tamaizsemmozi.blogspot.com   
Email         :     vaiskaru @yahoo.com
Fax             :     0351221569
தொ.பேசி         : சு.வை.லிங்கம்   019 6011569  முனைவர் எஸ். குமரன் 012 3123753

No comments:

Post a Comment